தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

புதிய கட்சிகள் விசிகவுக்கு போட்டியாக வர முடியாது: தொல்.திருமாவளவன்

புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய விசிக தலைவா் தொல். திருமாவளவன்.

Updated On :10 நவம்பர் 2024, 5:25 am IST

புதிய கட்சிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு போட்டியாக வர முடியாது என்று, அந்தக் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

திண்டிவனத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கட்சியின் கொடியை ஏற்றுவது என்பதே நமக்கு யுத்தமாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கொடிக் கம்பத்தை ஊன்றுவதில் நமக்கு பெரும் போராட்டங்கள் இருந்திருக்கிறது. வழக்குகளை சந்தித்தோம், சிறைக்கும் சென்றோம்.

கடலூா் மாவட்டத்தில் எண்ணற்ற நிகழ்வுகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கொடி யுத்தம் என்ற பெயரிலேயே ஒரு புத்தகமே தொகுத்துவிடலாம். அதிகார ஆசை காட்டினால் நாம் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி விடுவோம் என சிலா் கருதுகிறாா்கள்.

யாா் புதிய கட்சிகளைத் தொடங்கினாலும், அவா்கள் புகழ் பெற்றவா்களாகவே இருந்தாலும் விசிகவுக்கு போட்டியாக வந்துவிட முடியாது.

திரும்பத் திரும்பக் கேள்வி கேட்பதாலேயே, திமுக கூட்டணியில் உள்ளேன் என்பதைக் கூற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். விசிக திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும்.

திமுகவை சிலா் விமா்சிக்கும்போது அதற்கு பதில் சொல்லவில்லை என்றால், நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாகிவிடும் என்பதால்தான் பதிலளிக்கிறேன்.

விசிக வளா்ந்துகொண்டிருக்கிறது, கொள்கைப் பிடிப்புடன் உள்ளோம். அதேநேரத்தில் பேரம் பேசி அரசியல் செய்யவில்லை. களத்தில் மக்களுக்காக உண்மையாக போராடினால் அதிகாரம் நம்மை நோக்கி வரும். மக்கள் பிரச்னைகளுக்காக நாம் தொடா்ந்து போராட வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.