அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

டாடாவுக்கு போட்டியாக ரூ. 5 லட்சத்தில் மாருதியில் புதிய கார்!

டாடா பஞ்ச் காருக்குப் போட்டியாக புதிய எஸ்யூவி காரை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது குறித்து...

News image

டாடா ஹஸ்ட்லர் - படம் / நன்றி - ஹஸ்ட்லர்

Updated On :7 ஜூலை 2026, 4:28 pm IST

டாடா நிறுவனத்தின் பஞ்ச் மாடல் காருக்குப் போட்டியாக புதிய எஸ்யூவி காரை மாருதி சுசூகி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இதன் விலையையும் டாடாவுக்கு சவால் விடும் வகையில் ரூ. 5 லட்சம் என நிர்ணயித்துள்ளது.

டாடா நிறுவனத்தின் பஞ்ச், நெக்ஸான் ஆகிய இரு கார்களும் இந்திய பயனர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவில் பரவலாக ஹேட்ச்பேக் கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பலரும் எஸ்யூவி கார்களுக்கு மாறியுள்ளனர்.

எஸ்யூவி கார் என்றால் என்ன?

எஸ்யூவி கார் என்பது, இது சாதாரண கார்களைப் போலல்லாமல், தரையிலிருந்து அதிக உயரம் கொண்டதாக (அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ்) இருக்கும். பெரிய டயர்கள் மற்றும் முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டவை. இதனால் ஹேட்ச்பேக் கார்களைக் காட்டிலும் எஸ்யூவி கார்களை பலரும் விரும்புகின்றனர்.

இதனை முன்பே உணர்ந்த டாடா நிறுவனம், 2021ஆம் ஆண்டே டாடா பஞ்ச் என்ற எஸ்யூவி காரை அறிமுகம் செய்தது. இந்த காருக்கு கிடைத்த வரவேற்பால் டாடா நிறுவனத்தின் சந்தை மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து நெக்ஸான் என்ற காரையும் அறிமுகம் செய்தது. இந்த காருக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதனால் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அறிமுகமாகிறது ஹஸ்ட்லர்

தற்போது மாருதி நிறுவனமும் ஹஸ்ட்லர் (Hustler) என்ற மினி எஸ்யூவி காரை அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கி, சோதனை முயற்சிகளிலும் மாருதி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஹஸ்ட்லர் என்ற கார் கெய் கார் வகையைச் சேர்ந்தது. ஜப்பானில் இருசக்கர வாகனத்தை விட பெருசாகவும், காரை விடை சிறியதாகவும் கெய் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

டாடா பஞ்ச் காருக்கு போட்டியாக வேகன்ஆர் வடிவத்தைப்போன்று ஹஸ்ட்லர் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. 660 சிசி என்ஜினை மாருதி நிறுவனம் பயன்படுத்தவுள்ளது.

பஞ்ச் காருக்குப் போட்டியாக புதிய ஹஸ்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக ரூ. 5 - 6 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Maruti to launch a new car priced at ₹5 lakh to compete with Tata

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.