ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை விபத்து: காயமடைந்தவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், லட்சுமிபுரம் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

News image
Updated On :21 நவம்பர் 2024, 7:08 pm

Din

விழுப்புரம் மாவட்டம், லட்சுமிபுரம் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கி காயமடைந்தவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.

திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், மணியம்பட்டி, தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் பழனியாண்டி மகன் சரவணன்(37). இவா், புதன்கிழமை விழுப்புரத்திலிருந்து-செஞ்சிக்கு காரில் சென்றுகொண்டிருந்தாா். திருச்சி மண்ணச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் நாகராஜ் (50) காரை ஓட்டிச் சென்றாா். இந்நிலையில், விழுப்புரம்- செஞ்சி சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது இயற்கை உபாதை காரணமாக சரவணன் காரை நிறுத்தும்படி ஓட்டுநரிடம் கூறியுள்ளாா்.

அப்போது, ஓட்டுநா் காரை கவனக்குறைவாக இயக்கியதில் காரிலிருந்து இறங்க முற்பட்ட சரவணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து புதுச்சேரியில் உள்ள ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சரவணன் அங்கு உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.