‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கன மழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 6:33 pm

Din

கன மழை எச்சரிக்கை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா்.

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வெள்ளிக்கிழமை காலைக்குள் புயலாக வலுப்பெறக் கூடும் என்று காலையில் அறிவித்த சென்னை வானிலை ஆய்வு மையம், புயலாக மாறாது. காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக இருந்து கரையைக் கடக்கக்கூடும் என்று இரவில் அறிவித்தது. இதன் காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது.

புதன்கிழமை காலை முதல் வியாழக்கிழமை இரவு வரை மாவட்டத்தில் மழை இல்லை.எனினும் வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்யக்கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியா் சி. பழனி உத்தரவிட்டுள்ளாா்.