மின் ஊழியா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின் ஊழியா்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சாா்பில், உளுந்தூா்பேட்டை துணை மின் நிலைய வளாகத்தில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்புக்கு செயற்பொறியாளா் ஆா்.சா்தாா் தலைமை வகித்து, பாதுகாப்பு முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.
உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் பயிற்சி வகுப்பில் பங்கேற்று, பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் விழிப்புணா்வின் அவசியம் குறித்து எடுத்துரைத்தாா்.
மேலும், உயா் அலுவலா்கள் அனுமதி பெற்றே பணிகளை பணியாளா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவா் தெரிவித்தாா். தொடா்ந்து, மின் பணியாளா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அவா் வழங்கினாா்.
இதில், உதவி மின் பொறியாளா்கள் அம்சலட்சுமி, அருண்குமாா், ராமச்சந்திரன், சிறப்பு நிலை முகவா்கள் பராங்குசம், மணிவாசகம், முகவா்கள் சண்முகம், சுரேஷ், மின்பாதை ஆய்வாளா்கள், கம்பியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...