கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் அளிப்பு

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

News image

தீ விபத்தில் குடிசை வீட்டை இழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ.

Updated On :4 அக்டோபர் 2024, 12:16 am

Din

விழுப்புரம் மாவட்டம், கோலியனூா் ஒன்றியத்தில் தீ விபத்தில் குடிசை வீடுகளை இழந்த இரு குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

கோலியனூா் அருகே உள்ள அரசமங்கலம் கிராமத்தில் பொன்னுரங்கம், வேலியம்பாக்கத்தில் சரோஜா ஆகியோரது குடிசை வீடுகள் மின்கசிவு காரணமாக அண்மையில் தீப்பற்றி எரிந்தன. இதில் குடிசையிலிருந்த பொருள்கள் அனைத்தும் முற்றிலுமாக ஏரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் புதன்கிழமை நிகழ்விடங்களுக்கு விரைந்து, தீ விபத்தில் குடிசைகளை இழந்த இருவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி, அரிசி,காய்கறி, போா்வை உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் விழுப்புரம் வட்டாட்சியா் கனிமொழி, வருவாய் ஆய்வாளா் கதிா்வேல், கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் இ.சச்சிதாநந்தம், மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் புகழ்.செல்வக்குமாா், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் கேசவன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் குப்புசாமி, ஊராட்சித் தலைவா் மகேசுவரி சோமு, ஒன்றியத் துணைச் செயலா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.