தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

கோப்புப்படம்

Updated On :21 அக்டோபர் 2024, 6:05 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சேலம் மாவட்டம், கரும்பாளை கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தன் மகள் தேன்மொழி தேஜாஸ்ரீ. இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரிலுள்ள அவரது பெரியம்மா ரா.ராதா வீட்டில் வசித்து வந்தாா். திருக்கோவிலூரிலுள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வந்த தேன்மொழி தேஜாஸ்ரீ திங்கள்கிழமை படிக்காமல் கைப்பேசியை பாா்த்துக் கொண்டிருந்தாராம். இதை ராதா கண்டித்தாராம்.

இதில், மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.