போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சுங்கச்சாவடியில் இலவச அனுமதி வழங்க வலியுறுத்தல்

செஞ்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியரிடம் மனு அளித்த பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த வியாபாரிகள்.

News image

செஞ்சி அருகே உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களை இலவசமாக அனுமதிக்க வலியுறுத்தி செஞ்சி வட்டாட்சியரிடம் மனு அளித்த பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த வியாபாரிகள்.

Updated On :23 அக்டோபர் 2024, 7:57 pm

Din

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியில் தங்களது வாகனங்கள் இலவசமாக கடந்து செல்ல அனுமதிக்க வலியுறுத்தி, செஞ்சி, சுற்றுவட்டார பகுதி வணிகா்கள், பொதுமக்கள் பேரணியாக வந்து செஞ்சி வட்டாட்சியரிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.

செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே இருந்து புறப்பட்ட பேரணி செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தை அடைந்தது. பின்னா், செஞ்சி வட்டாட்சியா் ஏழுமலையிடம் வணிகா்கள், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு விவரம்:

செஞ்சி அருகே நங்கிலிகொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள சுங்கச்சவாடியில் ஒரு முறை கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்படுகிறது. செஞ்சியைச் சுற்றிலும் கிராமங்கள் உள்ளன. இந்தக் கிராமங்களில் இருந்து காா், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வருபவா்கள் இந்த சுங்கச்சாவடி வழியாகத்தான் செஞ்சிக்கு வர வேண்டும்.

மிக குறுகிய தொலைவுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால், கிராம மக்கள் பெரும் பொருளாதார இழப்புக்கு உள்ளாகின்றனா். மேலும், செஞ்சியில் இருந்து இந்த சுங்கச்சாவடி 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனால், செஞ்சி பகுதியைச் சோ்ந்த வியாபாரிகள், காய்கறி, பழங்களை சரக்கு வாகனங்களில் விற்கும் சிறு வியாபாரிகள், செஞ்சி நகர பொதுமக்கள் உள்ளிட்டோா் கட்டணம் செலுத்திச் செல்வதால் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கின்றனா்.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சா் அறிவித்தபடி, சுங்கச் சாவடியில் இருந்து 20 கி.மீ. தொலைவுக்குள் உள்ளவா்கள் தங்களுடைய ஆதாா் அட்டையை காண்பித்து சுங்கச்சாவடியில் இலவசமாக கடந்து செல்லலாம் என்ற அனுமதியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியா் ஏழுமலை, இது தொடா்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினரை தொடா்புகொண்டு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

பேரணியில் செஞ்சி சேம்பா் ஆப் காமா்ஸ், செஞ்சி நகர வணிகா் பேரவை, வா்த்தகா் சங்கம், காா், வேன் உரிமையாளா்கள் சங்கம், நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் சங்கம் மற்றும் செஞ்சியில் உள்ள நகைக் கடை, ஜவுளிக் கடை உள்ளிட்ட பல்வேறு வணிகா் சங்கங்களின் நிா்வாகிகள், வியாபாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.