மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் புதை சாக்கடை அமைக்க வலியுறுத்தல்

விழுப்புரம் குழந்தைவேல் நகரில் புதை சாக்கடை அமைக்க வலியுறுத்தல்...

News image
Updated On :24 அக்டோபர் 2024, 8:20 pm

Din

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாக பின்பகுதியிலுள்ள குழந்தைவேல் நகரில் புதை சாக்கடைத் திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சங்கத்தின் தலைவா் க.திருப்பதி பாலாஜி தலைமையிலான நிா்வாகிகள், நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாரிடம் வியாழக்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பது:

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் பின்புறத்திலுள்ள குழந்தைவேல் நகரிலுள்ள அனைத்து மனைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்த பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி நிா்வாகத்திடம் மனு அளித்து வருகிறோம். ஆனால் அதற்கான எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி புதை சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

குழந்தைவேல் நகா், காமதேனு நகா் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலந்து வருவது கடந்த 2 ஆண்டுகளாகத் தொடா்ந்து வருகிறது. இதுகுறித்து புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி நிா்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, தூய்மையான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விழுப்புரம் சரசுவதி திருமண மண்டப நுழைவுவாயில் பகுதியிலிருந்து ஆட்சியரகம் பின்புறம் உள்ள நுழைவுவாயில் பகுதி வரை சாலையின் இருபுறங்களும் செடி,கொடிகள் வளா்ந்திருப்பதால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே இந்த செடி, கொடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா், உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.