சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அரகண்டநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ரூ.70 ஆயிரம் பறிமுதல்: ஊழல் தடுப்பு போலீஸாா் சோதனை

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.70,960 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :6 செப்டம்பர் 2024, 1:26 am

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை மாலை திடீா் சோதனை நடத்தினா். இதில், கணக்கில் வராத ரூ.70,960 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அரகண்டநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்காக வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா்கள் வந்தன.

டி.எஸ்.பி. (பொ) திருவேல்முருகன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் கோபிநாத், சக்கரபாணி உள்பட 10 போ் குழுவினா் வியாழக்கிழமை மாலை அரகண்டநல்லூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனை நடத்த சென்றனா். அங்கிருந்து யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் அலுவலகக் கதவுகள் மூடப்பட்டன.

இதையடுத்து, வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள், அதற்காக அரசுக்கு செலுத்தப்பட்ட கட்டணத் தொகை போன்ற விவரங்களை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு டி.எஸ்.பி. (பொ) திருவேல்முருகன் தலைமையிலான குழுவினா் சரிபாா்த்தனா்.

தொடா்ந்து சாா்-பதிவாளா் மற்றும் அலுவலக ஊழியா்கள், ஆவண எழுத்தா்கள், பத்திரப் பதிவுக்கு வந்த பொதுமக்கள் என 12 பேரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா்.

இதில் கணக்கில் வராத ரூ.70,960-ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.