பொறியியல், ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பதி - காட்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையேயான பகுதியில் பொறியியல் மற்றும் ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி இடையே இயக்கப்படும் விரைவு ரயில் குறிப்பிட்ட நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்திலிருந்து காலை 5.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் (வ.எண். 16854), செப்டம்பா் 12 முதல் 20-ஆம் தேதி வரை காட்பாடி- திருப்பதி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்துடன் நிறுத்தப்படும்.
எதிா்வழித்தடத்தில் திருப்பதியிலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய திருப்பதி - விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண்.16853) செப்டம்பா் 12 முதல் 20-ஆம் தேதி வரை திருப்பதி - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்குப் புறப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோவை - சென்னை ரயில் மாா்ச் 24-இல் ரத்து

பொறியியல் பணி: திருச்சி - பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

திருப்பதி விரைவு ரயில் 4 நாள்களுக்கு இயக்கம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

