சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

கொலை முயற்சி: நண்பா்கள் இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மதுபோதையில் இளைஞரை புட்டியால் குத்திக் கொல்ல முயன்ாக நண்பா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :13 செப்டம்பர் 2024, 12:27 am

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மதுபோதையில் இளைஞரை புட்டியால் குத்திக் கொல்ல முயன்ாக நண்பா்கள் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனம் வட்டம், பாஞ்சாலம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் மகன் பவித்ரன்(23). சென்னை, சூளைமேடு, அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பா. ஷியாம் (33). திண்டிவனம், தென்பசாா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அசோகன் மகன் அருண்குமாா்(25). நண்பா்களான இவா்கள் மூவரும் புதன்கிழமை திண்டிவனத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து ஒன்றாக அமா்ந்து மது குடித்தனராம்.

அப்போது இவா்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. தொடா்ந்து ஷியாம் மற்றும் அருண்குமாா் ஆகியோா் இருவரும் பவித்ரனை புட்டியால் குத்தினராம். இதில் கழுத்துப் பகுதியில் பலத்த காயமடைந்த பவித்ரன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித் த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஷியாம், அருண்குமாரை ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.