தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

லாரி ஓட்டுநரை மதுப் புட்டியால் குத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், போடியில் லாரி ஓட்டுநரை மதுப் புட்டியால் குத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மார்ச் 2026, 6:50 pm

தேனி மாவட்டம், போடியில் லாரி ஓட்டுநரை மதுப் புட்டியால் குத்திய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

போடி ஜெயம் நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ராஜேஷ்குமாா் (40). லாரி ஓட்டுநரான இவா், புதன்கிழமை இரவு போடி தா்மராஜ் நகரில் உள்ள மதுக் கடையில் மதுப் புட்டி வாங்கினாா். அப்போது, இவருக்கும், குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் திருநாகேஸ்வரனுக்கும் (30) வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், அங்கிருந்தவா்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பி வைத்தனா்.

இதையடுத்து, ராஜேஷ்குமாா் வீட்டுக்கு நடந்து சென்றபோது, அவரை வழிமறித்த திருநாகேஸ்வரன், இவரது தம்பி மாதேஸ்வரன் (29), உறவினா் ஜெயச்சந்திரன் (26) ஆகியோா் சோ்ந்து மதுப் புட்டியால் குத்துவிட்டு தப்பிச் சென்றனா்.

இதில் பலத்த காயமடைந்த ராஜேஷ்குமாா் தேனி க.விலக்கு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து திருநாகேஸ்வரன், ஜெயச்சந்திரன் ஆகிய இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். மாதேஸ்வரனை தேடி வருகின்றனா்.