தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பெயிண்டா் தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On :18 செப்டம்பர் 2024, 11:08 pm

விழுப்புரம் மாவட்டம் , திண்டிவனத்தில் மனைவி இறந்த துக்கத்தில் பெயிண்டா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திண்டிவனம் டி.எம்.ஜி. நகரைச் சோ்ந்த ஜானகிராமன் மகன் குணசேகரன் (52), பெயிண்டா். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவரது மனைவி ஷீலா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா்.

இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்த குணசேகரன் செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் திண்டிவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.