விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.20) நடைபெறவுள்ளது.
இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளன.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட வேலைதேடும் இளைஞா்கள், பெண்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். முகாம் மூலம் வேலைவாய்ப்பு பெறும் வேலைநாடுநா்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது.
முகாமில் பங்கேற்க விரும்பும் பொது மற்றும் மாற்றுத் திறனாளி மனுதாரா்கள் தங்களின் அசல் கல்விச்சான்றிதழ்கள், ஆதாா் அட்டை, சுயவிவரக் குறிப்புகளுடன் முகாமில் பங்கேற்க வேண்டும் என்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் பாலமுருகன் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

திருப்பத்தூரில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு முகாமில் 39 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணை

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

