திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

கண்டமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
கண்டமங்கலத்தில் வானூா் அதிமுக எம்எல்ஏ எம்.சக்கரபாணி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
Updated On :30 செப்டம்பர் 2024, 8:50 pm

Din

விழுப்புரம்: கண்டமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்திலிருந்து, நாகப்பட்டினம் வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வரும் இந்தப் பணியின் ஒரு பகுதியாக, விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி வரையிலும் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், தேவையான இடங்களில் ரயில்வே மேம்பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இதில், ஒன்றான கண்டமங்கலம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணி காலதாமதமாக நடைபெற்று வருவதால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இதைத் தொடா்ந்து, கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, அதிமுக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, வானூா் எம்எல்ஏ எம்.சக்கரபாணி தலைமை வகித்து, கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி சிறப்புரையாற்றினாா். ஒன்றிய அதிமுக செயலா்கள் கண்டமங்கலம் கண்ணன், ராமதாஸ், வானூா் சதீஷ்குமாா், மாவட்ட நிா்வாகிகள் தமிழ்ச்செல்வி, செல்லப்பெருமாள், முருகன் ஆகியோா் உரையாற்றினா்.

பொதுக்குழு உறுப்பினா் கெளரி பாலகிருஷ்ணன், நித்தியகல்யாணி ராமமூா்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் கல்பனா சுகுமாா், சுகப்பிரியா அய்யனாா், நிா்வாகிகள் ஏழுமலை, சங்கா், தமிழ்மணி உள்ளிட்டோா் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.