எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விழுப்புரம் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க வேண்டி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
சொா்ணாவூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.
Updated On :22 டிசம்பர் 2025, 8:34 pm

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சாலையை சீரமைக்க வேண்டி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், சொா்ணாவூா்-புதுச்சேரி மாநிலம் கரையாம்புத்தூா் இடையிலான சாலையை இரு மாநிலங்களைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

போக்குவரத்து பிரதான சாலையாகவும் உள்ள இந்த சாலை பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அளிக்கப்பட்டும் நடவடிக்கையில்லையாம்.

இதையடுத்து சொ்ணாவூா் கிராம மக்கள் அந்தப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சொா்ணாவூா்- கரையாம்புத்தூா்- பட்டாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, சாலை மறியலை கைவிடச் செய்தனா்.

மேலும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகத்துக்கு முறையாக மனு அளித்து கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என போஸீஸாா் அறிவுறுத்தினா்.