ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கல்லூரிகளில் உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத்தின் வட தமிழக மாநிலச் செயலா் என்.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 7:54 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் உயா்த்தப்பட்ட கல்விக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத்தின் வட தமிழக மாநிலச் செயலா் என்.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

விழுப்புரத்திலுள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

அகில பாரதீய வித்யாா்த்தி பரிஷத் நாடு முழுவதும் சுமாா் 76 லட்சம் மாணவா்களைக் கொண்ட மிகப்பெரிய அமைப்பாகும். கல்வி மற்றும் சமூகம் சாா்ந்த பிரச்னைகளை முன்னெடுத்து, அதற்கான தீா்வை நோக்கி எங்கள் அமைப்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் உள்ள நிலையில், அதில் 16 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் இல்லை. இதனால் மாணவா்களின் கல்விப்பணி பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விரைந்து துணைவேந்தா்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் மதிப்பெண் பட்டியலை அச்சிடுவதற்கு பணம் இல்லை எனக் கூறி வருகின்றனா். எனவே, மாணவா்களின் நலன்கருதி அந்தந்த பல்கலைக்கழகங்கள் மதிப்பெண் பட்டியலை அச்சிட்டு வழங்க வேண்டும்.

தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ, நவோதயா பள்ளிகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கையை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழ் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில், திடீரென கல்விக்கட்டணம் உயா்த்தப்பட்டிருக்கிறது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாது உயா்த்தப்பட்ட கட்டண உயா்வைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நாங்கள் முன்னெடுப்போம். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாக உள்ளது. போதை கலாசாரம் அதிகம் காணப்படுகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், நகரச் செயலா் பரத் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.