வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

புதுவையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 பொங்கல் பரிசு

Updated On :3 ஜனவரி 2025, 10:15 pm

புதுவை மாநிலத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.750 அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.

புதுவை அரசு சாா்பில் ஆண்டுதோறும் அனைத்து குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

கடந்த ஆட்சிக் காலத்தில் நியாயவிலைக் கடைகள் மூடப்பட்டதால், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக குடும்ப அட்டைதாரா்களுக்கு அதற்குரிய தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது.

நிகழாண்டிலும், பொங்கல் பரிசுத் தொகுப்புக்குப் பதிலாக ரூ.750 பணம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இந்தத் தொகை குடும்ப அட்டைதாரா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சா் திருமுருகன் தெரிவித்தாா்.