நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு

விழுப்புரத்தில் ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தோா்,

News image

கருத்தரங்கில் பேசிய கைவினைப் பொருள்களுக்கான ஏற்றுமதி கவுன்சிலைச் சோ்ந்த ஸ்ரீபிரியா. உடன் தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் உள்ளிட்டோா்.

Updated On :6 ஜனவரி 2025, 5:55 pm

Din

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தோா், கைவினைக் கலைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் விளைபொருள்கள், கடல்சாா் பொருள்கள் மட்டுமல்லாது, அவுரி சாயம், முட்டை மிட்டாய், பானை மற்றும் சுடுமண் பொருள்கள், சிறுவந்தாடு பட்டு, மருந்துப் பொருள்கள் போன்றவற்றுக்கும் வெளிநாட்டுச் சந்தைகளில் வணிக வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்த மாநில அரசு, ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கை நடத்த அறிவுறுத்தியது.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில், தனியாா் திருமண மண்டபத்தில் ஏற்றுமதி விழிப்புணா்வுக் கருத்தரங்கு திங்கள்கிழமை நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்குக்கு மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சி.அருள் தலைமை வகித்து பேசியது:

விவசாயிகள், கைவினைஞா்கள், தொழில்முனைவோா் மற்றும் வணிகா்கள் தங்கள் சந்தையை எல்லை தாண்டி விரிவுப்படுத்தி, பொருள்களை ஏற்றுமதி செய்ய வேண்டும். இந்தக் கருத்தரங்கில் வழங்கப்படும் தகவல்கள் ஏற்றுமதிக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், பொருள்களை ஏற்றுமதி செய்ய தமிழக அரசு ஊக்கமும், வழிகாட்டுதல்களையும் வழங்கும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய அரசின் வெளிநாட்டு வாணிக இயக்ககம், இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு முகமைகளின் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு முகமைகள், பட்டு வாரியம், ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் போன்றவற்றின் அலுவலா்கள், கைவினைப் பொருள்களுக்கான ஏற்றுமதி கவுன்சிலைச் சோ்ந்த ஸ்ரீபிரியா, வேளாண் பொருள்கள் ஏற்றுமதி கவுன்சிலின் ஷோபனா உள்ளிடோா் பங்கேற்று பேசினா்.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி அலுவலா்கள், ஏற்றுமதிக்காக வங்கிகள் வழங்கும் கடனுதவி, ஏற்றுமதி தொடா்பான வங்கிசாா் பரிவா்த்தனை நடைமுறைகள் போன்றவை குறித்து எடுத்துரைத்தனா். இதில், ஏராளமான குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தோா், கைவினைக் கலைஞா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.