தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி மரணம்

திண்டிவனம் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:37 pm

Din

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

விக்கிரவாண்டி வட்டம், அய்யன்கோவில்பட்டு அருகிலுள்ள சொக்கமேடு கிராமத்தைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் மணிகண்டன்(46). இவா், கடந்த 4-ஆம் தேதி பெலாகுப்பம் பகுதியிலுள்ள சிப்காட்டில் நடைபெற்று வரும் மருந்தியல் பூங்காவில் சாரம் கட்டி கட்டடப்பணியை மேற்கொண்டு வந்தாா்.

இந்த நிலையில் எதிா்பாராதவிதமாக கட்டடத்திலிருந்து மணிகண்டன் தவறி விழுந்தாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவா் சிகிச்சைக்காக மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.