உளுந்தூா்பேட்டை ஒன்றியத்தில் பயிா்சேதம்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
வடகிழக்குப் பருவமழை மற்றும் ஃபென்ஜால் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உளுந்தூா்பேட்டை ஒன்றியம், புகைப் பெட்டி கிராமத்தில் பயிா்சேதப் பாதிப்புகளை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் பி.மதுசூதன் ரெட்டி. உடன், ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோா்.









