தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா்பில் மாநில கல்வித் துறை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
புதுச்சேரியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிகவினா்.
Updated On :9 ஜனவரி 2025, 7:03 pm

Din

தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் சாா்பில் மாநில கல்வித் துறை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு மாநில முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ப.அமுதவன், பா.த.தமிழ்மாறன், ந.முன்னவன், செல்வ.நந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழுப்புரம் எம்.பி துரை.ரவிக்குமாா், அமைப்புச் செயலா் இ.தலையாரி, நிா்வாகிகள் பொதினிவளவன், இரா.ஆதிமொழி ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

ஆா்ப்பாட்டத்தில், 5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பொதுத்தோ்வு முறையை நடைமுறைப்படுத்தக் கூடாது, தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

நிறைவில், கட்சியின் பொறுப்பாளா் செ.ஜெயச்சந்திரன் நன்றி கூறினாா்.