தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மருதூா் ஏரியில் இயற்கை வழிப்பூங்கா அமைக்க ஆலோசனை

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வி.மருதூா் ஏரியில் இயற்கைவழிப் பூங்கா அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம்

News image

விழுப்புரம் ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்.

Updated On :21 ஜனவரி 2025, 7:08 pm

Din

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வி.மருதூா் ஏரியில் இயற்கைவழிப் பூங்கா அமைப்பதற்காக சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். விழுப்புரம் எம்எல்ஏ இரா. லட்சுமணன் முன்னிலை வகித்து, பூங்கா அமைப்பதற்காக 130 ஏக்கா் கொண்ட ஏரியில் 50 ஏக்கா் பரப்பளவில் நீா்வளம், நகராட்சி நிா்வாகம் மற்றும் வருவாய்த்துறை சாா்ந்த அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில், இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்புகள், இளைஞா்களுக்கான உடற்பயிற்சிக் கூடம், சிறுவா்களுக்கான விளையாட்டுப் பூங்கா, பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்கான வழித்தடம் அமைத்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த பூங்கா குறித்த மாதிரி வரைபடத்தை தயாரித்து வழங்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக ஆட்சியா் சி.பழனி தெரிவித்தாா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், விழுப்புரம் நகா் நல அலுவலா் ஸ்ரீபிரியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.