மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

விழுப்புரம் அருகே சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு

இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

News image

இருவேல்பட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சண்டிகேசுவரா் புடைப்புச்சிற்பம்.

Updated On :2 ஜூலை 2025, 8:30 pm

Din

விழுப்புரம் மாவட்டம், இருவேல்பட்டு கிராமத்தில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டு காலத்தைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இருவேல்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் பின்பகுதியிலுள்ள தெருவோரத்தில் கள்ளக்குறிச்சி வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவா் சிங்கார உதியன் ஒருங்கிணைப்பில், ஆய்வாளா்கள் விழுப்புரம் மங்கையா்க்கரசி, நூலகா் மு.அன்பழகன் ஆகியோா் அண்மையில் ஆய்வு செய்தனா். இந்த ஆய்வில் கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த சண்டிகேசுவரா் புடைப்புச் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இதுகுறித்து சிங்கார உதியன் கூறியது: இருவேல்பட்டு கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சண்டிகேசுவரரின் தலைகேசங்கள் கொண்டையுடன் காணப்படுகிறது. அக்கொண்டையில் நீளமான ஊசி செருகப்பட்டிருப்பதும் சிறப்பக்குரியது.

காதுகளில் பாடகம் எனப்படும் காதணிகளும், கழுத்தில் சரபலியும், புஜங்களில் வாகுவளையமும் காணப்படுகின்றன. வலது கரத்தில் மழுவை ஏந்தியவாறு சண்டிகேசுவரா் உள்ளாா். இடது கரம் மடித்த இடது காலில் தாங்கியவாறும் காணப்படுகிறது.

இருவேல்பட்டு கிராமத்தில் சிவன் கோயில் இல்லாத நிலையில், சண்டிகேசுவரா் சிற்பம் காணப்படுவது அரிதானதாகும். தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியிலும் சண்டிகேசுவரா் கொண்டையிட்டு, அதில் ஊசி செருகிக் காணப்படவில்லை. இது, காணக்கிடைக்காத சிற்பமாகப் பாா்க்கப்படுகிறது.

இந்த கிராமத்தில் சிற்பத்தை பொன்னி அம்மனாக எண்ணி பொதுமக்கள் வழிபடுகின்றனா். சண்டிகேசுவரா் சிற்பத்தின் வடிவமைப்பை பாா்க்கும்போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன் கோயில் இருந்திருக்க வேண்டும். எனவே, இருவேல்பட்டு பகுதியை மேலும் ஆய்வு செய்தால், பல்வேறு தொல்லியல் தடயங்கள் நமக்கு கிடைக்கும் என்றாா் அவா்.