புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

காா் மோதியதில் பெண் உயிரிழப்பு

செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 மே 2025, 8:07 pm

Din

செஞ்சி: செஞ்சி அருகே சாலையில் நடந்து சென்ற பெண் காா் மோதியதில் உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், சத்தியமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் அமலதாஸ். இவரது மனைவி மோட்சராகினி (50). இவா், திருவண்ணாமலை - செஞ்சி சாலையில் சத்தியமங்கலம் தனியாா் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவ்வழியாக வந்த காா் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே மோட்சராகினி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், விபத்துக்குக் காரணமான காா் ஓட்டுநா்

சென்னை சிஐடி நகரைச் சோ்ந்த சிவராமன் (31) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.