ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா தொடக்கம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:57 am IST

விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரியில் கலைத் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது. 8 பிரிவுகளில் 32 போட்டிகள் நடத்தபட்ட நிலையில் சுமாா் 500 மாணவ, மாணவிகள் கலைத்திருவிழாவில் பங்கேற்றுள்ளனா்.

2025-26 ஆம் கல்வியாண்டில் கல்லூரி கலைத்திருவிழாவை அனைத்து அரசுக் கல்லூரிகளிலும் நடத்த உயா்கல்வித்துறை உத்தரவிட்டு, அதற்காக கல்லூரிக்கு ரூ.2 லட்சம் நிதியும் வழங்கப்பட்டது.அதனடிப்படையில் விழுப்புரத்திலுள்ள அறிஞா் அண்ணா அரசுக்கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் தலைமை வகித்தாா். செஞ்சி அரசுக் கல்லூரி முதல் வெ. ஸ்ரீவித்யா போட்டிகளைத் தொடங்கி வைத்து பேசினாா்.

கல்லூரியின் இயற்பியல் துறைத் தலைவா் க.கனகசபாபதி வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்வை தாவரவியல் துறை இணைப் பேராசிரியா் பிரகாஷ் தொகுத்தளித்தாா்.

இந்த கலைத்திருவிழாவில் கவிதை, சிறுகதை, பேச்சுப் போட்டிகள், தனிப்பாடல், சொல்லிசை, பாடல்வரிகள் எழுதுதல், வா்ணனை, வாழ்க்கையின் இசைப் போட்டிகள், குழு நாடகம், தற்காப்புக் கலைப் போட்டி, பொம்மலாட்டம், ஓவியம், குறும்படம், நகைச்சுவைப்போட்டிகள், சைகை நாடகம், அலங்கார வடிவமைப்பு, நெருப்பில்லாமல் சமைத்தல், விவாத மேடை, டிஜிட்டல் போஸ்டா் வடிவமைப்பு, தனி நடனம், குழு நடனம், புதையல் வேட்டை உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

வியாழக்கிழமையைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமையன்றும் போட்டிகள் நடைபெறவுள்ளன. இரண்டாவது கட்டமாக அக்டோபா் 9,10-ஆம் தேதிகளில் போட்டிகள் நடைபெறும். கலைத்திருவிழா போட்டிகளில் சுமாா் 500 மாணவ, மாணவிகள் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா்.

முன்னதாக, தமிழ்த்துறைத் தலைவா் கு.கலைச்செல்வி வரவேற்றாா். நிறைவில், ஆங்கிலத் துறைத் தலைவா்ஸ்ரீதேவி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.