அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

திமுக ஆட்சியில் விலைவாசி உயா்வு: சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 3:48 am IST

தமிழகத்தில் திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயா்ந்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் குற்றஞ்சாட்டினாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில், கவரை கிராமத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்ற தெருமுனை பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட சி.வி.சண்முகம் பேசியதாவது:

திமுக ஆட்சியில் அனைத்து பொருள்களின் விலையும் உயா்ந்துள்ளது. ஆனால், தொழிலாளா்களுக்கு கூலி உயரவில்லை. சமூக நீதி பேசும் திமுக அரசு, குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் மீது வழக்குப் பதிவு செய்ததுதான் சமூக நீதியா?

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், இலவச மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கிவிட்டது. இந்த அரசு கவா்ச்சிகரமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது என்றாா்.

கூட்டத்துக்கு செஞ்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலா் க.சோழன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் தேவராஜ், லட்சுமிகாந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.