ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

வாகனங்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

News image

உளுந்தூா்பேட்டையில் தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டுவில்லையை அரசுப் பேருந்தில் வியாழக்கிழமை ஒட்டிய கள்ளக்குறிச்சி மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:28 pm

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை அரசுப் பேருந்து உள்ளிட்ட வாகனங்களை ஒட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.

உளுந்தூா்பேட்டை பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை ஒட்டி பணியைத் தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு என்ற நிலையை அடைந்திடும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் பல்வேறு துறைகளின் சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளை அரசுப் பேருந்துகள், தனியாா் பேருந்துகள், நான்கு, மூன்று, இரண்டு சக்கர வாகனங்களில் ஒட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மூன்று சக்கர வாகனப் பேரணியும் தொடங்கப்பட்டுள்ளது.

எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நான்குத் தொகுதிகளின் வாக்காளா்களும் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தவறாமல் வாக்களித்து, தங்கள்ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்றாா்.

நிகழ்வில் மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் அ.லலிதா, உளுந்தூா்பேட்டை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரா.செந்தில்குமாா், உதவித் தோ்தல் அலுவலா் பாலசுப்ரமணியன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், மோட்டாா் வாகன ஆய்வாளா் மீனாகுமாரி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.