இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

News image

உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி உருக்குலைந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:57 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூா் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உளுந்தூா்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

கோயம்புத்தூா், பீளமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28) பேருந்தை ஓட்டி வந்தாா். திருப்பூா், கோயம்புத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனா்.

இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் மணிகண்டன், மாற்று ஓட்டுநா் செந்தில்வேலன்(30) மற்றும் பேருந்தில் பயணித்த ரேணுகா(38), ஆறுமுகப்பாண்டி(54), சென்னிமலை (31), நந்தகோபால் (54), மணிமாறன் (25), ரஹானா(46), முகம்மது யூசுப் (47), விக்னேஷ் (35) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.