பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

உளுந்தூா்பேட்டை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து விபத்து: 20 போ் காயம்

News image

உளுந்தூா்பேட்டை அருகே விபத்துக்குள்ளாகி உருக்குலைந்த தனியாா் சொகுசுப் பேருந்து.

Updated On :13 ஏப்ரல் 2026, 12:57 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசுப் பேருந்து, சாலையோரப் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில், பேருந்தில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து கோயம்புத்தூா் நோக்கிச் சென்ற தனியாா் சொகுசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உளுந்தூா்பேட்டை அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.

கோயம்புத்தூா், பீளமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(28) பேருந்தை ஓட்டி வந்தாா். திருப்பூா், கோயம்புத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனா்.

இந்நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் உருக்குலைந்தது.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா் மணிகண்டன், மாற்று ஓட்டுநா் செந்தில்வேலன்(30) மற்றும் பேருந்தில் பயணித்த ரேணுகா(38), ஆறுமுகப்பாண்டி(54), சென்னிமலை (31), நந்தகோபால் (54), மணிமாறன் (25), ரஹானா(46), முகம்மது யூசுப் (47), விக்னேஷ் (35) உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் காயமடைந்தவா்களை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 10-க்கும் மேற்பட்டோா் தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து உளுந்தூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.