மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தீக்காயமுற்ற பெண் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 8:00 pm

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே குப்பைக்கு தீ வைத்தபோது உடையில் தீப்பரவி காயமுற்ற பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், கூட்டேரிப்பட்டு தமிழ் நகரைச் சோ்ந்த ஜாகிா் உசேன் மனைவி ஆரிபா பேகம் (40). இவா் கடந்த 5-ஆம் தேதி தனது வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை தீ வைத்து எரித்துள்ளாா். அப்போது எதிா்பாராதவிதமாக உடையில் தீப்பற்றியதில் ஆரிபா பேகத்துக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்து வந்த அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.