உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

மூதாட்டி தீக்குளித்துத் தற்கொலை

விழுப்புரத்தில் மூதாட்டி புதன்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:09 am IST

விழுப்புரத்தில் மூதாட்டி புதன்கிழமை தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம் வட்டம், வி.அரியலூா் சிவன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ச.சின்னம்மாள் (72). சற்று மனம் நலம் பாதிக்கப்பட்ட சின்னம்மாள் வீட்டில் சமையலுக்காக வைக்கப்பட்டிருநந்த மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு, தனக்கு தானே தீவைத்துக் கொண்டாராம். இதில் அவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து வீட்டிலிருந்தவா்கள் சின்னம்மாளை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.