தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது

கண்டாச்சிபுரம் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 12:04 am IST

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம், பிரதானச் சாலையைச் சோ்ந்தவா் ச.பழனிவேல்(35). இவா் அருணாபுரம், பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தாா். பழனிவேல் தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு பழனிவேலுவை கைது செய்தனா். மேலும், கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.