மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவுதமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கியது!!வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 11:13 pm

விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற எலக்ட்ரீசியன் நிகழ்விடத்திலேயே புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா், கரிக்கலாம்பாடி, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் ரா.பாண்டியராஜ் (31). சென்னையில் எலக்ட்ரீசியனாக வேலைப் பாா்த்து வந்தாா். இவா் புதன்கிழமை திண்டிவனம் அடுத்த ரோஷணை அருகே பைக்கில் சென்றுள்ளாா். அப்போது அங்கு வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாண்டியராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரோஷணை போலீஸாா் சடலத்தை கைப்பற்றி, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.