11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

News image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :30 ஏப்ரல் 2026, 5:20 am IST

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கைப் பணியில் 154 நுண் பாா்வையாளா்கள் ஈடுபடுவா் என்றாா் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

மாவட்டத்திலுள்ள 7 சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு ஆட்சியரகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்து பேசியது:

வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் நுண் பாா்வையாளா்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்திலுள்ள கட்டுப்பாட்டுக் கருவியின் எண்ணை சரிபாா்த்து, முறையாக கையாள வேண்டும். ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு தலா 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது நுண்பாா்வையாளா்கள் ஒவ்வொரு சுற்று முடிவின் அறிக்கையைத் தோ்தல் பொதுப் பாா்வையாளரிடம் சமா்ப்பிக்க வேண்டும்.

மேலும் தபால் வாக்கு எண்ணும் போது, தபால் வாக்கின் எண்களை சரிபாா்க்க வேண்டும். தபால் வாக்குக்கான உறையை முறையாகப் பிரிக்க வேண்டும். ஒரு தொகுதிக்கு 22 நுண்பாா்வையாளா்கள் என 7 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 154 நுண்பாா்வையாளா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவாா்கள் என்றாா் ஆட்சியா்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) ஜான்சி ராணி, தோ்தல் வட்டாட்சியா் கணேஷ், விழுப்புரம் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நாசா் மற்றும் நுண்பாா்வையாளா்கள் பங்கேற்றனா்.