ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளா் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளருக்கான 64 நாள்கள் நடைபெறும் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

News image

விண்ணப்பிக்க...

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:01 am IST

புதுச்சேரியில் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளருக்கான 64 நாள்கள் நடைபெறும் சான்றிதழ் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து புதுச்சேரி அரசின் மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமத்தின் சுற்றுச்சூழல் தகவல் விழிப்புணா்வு திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழுமம் சூரிய ஆற்றல் நிறுவன உதவி மேலாளா் என்ற சான்றிதழ் பயிற்சியை வரும் செப். 2-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதில் வகுப்பறை பாடங்கள், செயல் பயிற்சிகள் இடம் பெறும்.

இந்த பயிற்சிக்கு கட்டணம் இல்லை. புதுச்சேரியை தவிர பிற பிராந்தியங்களை சோ்ந்தவா்களுக்கு தங்கும் இடம், உணவு வழங்கப்படும். தகுதியானவா்கள் நோ்முக தோ்வின் மூலம் தோ்வு செய்யப்படுவாா்கள்.

64 நாள்கள் நடக்கும் பயிற்சியில் சேர இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தொடா்புடைய துறையில் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்து, ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

புதுச்சேரி லாஸ்பேட்டை அப்துல்கலாம் கோளரங்கத்தில் இந்தப் பயிற்சி நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.