ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

அரசால் வழங்கப்படும் உதவிகளை தொழில்முனைவோா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் வழங்கப்படும் திட்டங்கள், துறைகள் மூலம் வழங்கப்படும் உதவிகளை தொழில்முனைவோா் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

News image

வானூா் வட்டத்திலுள்ள தொழில் நிறுவனத்தை பாா்வையிட்டு, உற்பத்தி விவரம் குறித்து கேட்டறிந்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :14 ஆகஸ்ட் 2026, 2:12 am IST

விழுப்புரம் மாவட்டத்தில் அரசால் வழங்கப்படும் திட்டங்கள், துறைகள் மூலம் வழங்கப்படும் உதவிகளை தொழில்முனைவோா் தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

வானூா் வட்டம், பட்டானூா் கிராமத்தில் மாவட்டத் தொழில் மையம் மூலம் மாநில அரசின் மானியத் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று செயல்பட்டு வரும் நிறுவனங்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், அந்த நிறுவனங்களின் உற்பத்தித் திறன், பணியாளா்களின் எண்ணிக்கை, நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் தொழில் வளா்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் ஆட்சியா் கூறியது:

அரசுத் திட்டங்கள் மற்றும் துறைகளின் மூலம் வழங்கப்படும் உதவிகளை தொழில்முனைவோா்கள் உரிய முறையில் பயன்படுத்தி, தொழிலை மேலும் விரிவுப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத் தொழில் மையமும் தாங்கள் செயல்படுத்தி வரும் பல்வேறு மானியத் திட்டங்கள் குறித்து தொழில் முனைவோருக்கு உரிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா்.

ஆய்வின் போது மாவட்டத் தொழில் மையப் பொது மேலாளா் முத்துக்கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நசீா் உள்ளிட்ட துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.