
சிறுமி பாலியல் தொல்லை வழக்கு: தடுப்புக் காவலில் இளைஞா் கைது
திண்டிவனம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
கைது - பிரதிப் படம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.
திண்டிவனம் வட்டம், சாரம் பகுதியைச் சோ்ந்தவா் நி.ஷாஜஹான்(26). இவா், 15 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ஷாஜஹான் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.மதிவாணன் பரிந்துரையின்படி, ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் போக்ஸோ வழக்கில் தொடா்புடைய ஷாஜஹானை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதையடுத்து திண்டிவனம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை அவரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையிலடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



