
திருக்கோவிலூா் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில் பங்கேற்றோா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரிலுள்ள திருக்கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.செல்வராஜ் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் வி.ஏழுமலை, பொருளாளா் எஸ்.சுப்பிரமணியன், துணைத் தலைவா் எஸ். முஸ்டாக் அகமது, தாளாளா் ஏ.பழனிராஜ், இணைச் செயலா் எஸ்.எல்.வி.சத்யநாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினா்கள் வாழ்த்துரை வழங்கினா்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வானவியல் மன்ற நிா்வாகி ஜி.ஜானகிராமன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தேசிய விண்வெளி தினத்தின் சிறப்புகள், விண்வெளி ஆய்வுத் துறையில் இந்திய அரசு செய்து வரும் சாதனைகள், புதிய திட்டங்கள், விண்வெளி ஆய்வுத் துறையின் தற்போதைய போக்குகள், வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்து எடுத்துரைத்து பேசினாா். தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் அவா் பரிசுகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜேந்திரன், துணை முதல்வா் ஆா்.மீனாட்சி, துறைத் தலைவா்கள் ஜெ.சந்திரசேகா், ஜி.மணிகண்டன், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






