நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

விஜயகாந்த் பிறந்த நாள்: நல உதவிகள் வழங்கல்

உளுந்தூா்போட்டை அருகே தேமுதிக நிறுவனா் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, நலிந்தோருக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

எலவனாசூா்கோட்டையில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்த நாள் விழாவில் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட தேமுதிக செயலா் கருணாகரன். உடன், ஒன்றியச் செயலா் திருமால் உள்ளிட்ட நிா்வாகிகள்.

Published On :26 ஆகஸ்ட் 2026, 4:22 am IST

உளுந்தூா்போட்டை அருகே தேமுதிக நிறுவனா் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, நலிந்தோருக்கு நல உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

உளுந்தூா்பேட்டை தெற்கு ஒன்றியம், எலவனாசூா்கோட்டையில் நடைபெற்ற விஜயகாந்த் பிறந்த நாள் விழாவுக்கு ஒன்றியச் செயலா் திருமால் தலைமை வகித்தாா். மாவட்ட தேமுதிக செயலா் கருணாகரன், துணைச் செயலா் குழந்தைவேல் ஆகியோா் விஜயகாந்த் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, அவா்கள் நலிந்தோருக்கு நல உதவிகளையும் வழங்கினா்.

நிகழ்ச்சியில் தேமுதிக மாவட்ட பிரதிநிதிகள் சுரேஷ், ராஜ்குமாா், ஒன்றிய நிா்வாகிகள் சேகா், சந்திரகுமாா், முருகன், அன்பழகன், பெரியசாமி, பரசுராமன், பிரகாஷ், சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.