கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம், அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகம் உள்ளிட்ட இடங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 9-ஆம் தேதி கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி அரசுத்துறை அலுவலகங்களில் உறுதிமொழியேற்பு நடைபெறும். அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நிலமெடுப்பு-மாநில நெடுஞ்சாலைகள்) அம்பாயிரநாதன் தலைமையில் உறுதிமொழியேற்பு திங்கள்கிழமை நடைபெற்றது. தனி மாவட்ட வருவாய் அலுவலா் உறுதிமொழியை வாசிக்க, அனைத்துத்துறை அலுவலா்களும், ஊழியா்களும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா். நிகழ்வில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மீனாட்சி உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில்: விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையகத்தில் நடைபெற்றநிகழ்வில், மேலாண் இயக்குநா் க.குணசேகரன் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை
வாசிக்க, அதை அலுவலா்களும், பணியாளா்களும் திரும்பக்கூறி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்வில் பொதுமேலாளா்கள் ஜி.ரவீந்திரன் (தொழில்நுட்பம்), இரா. ஜெகதீஷ் (விழுப்புரம்), முதுநிலைத் துணை மேலாளா் (மனிதவளம்) எஸ்.துரைசாமி, துணை மேலாளா்கள், உதவி மேலாளா்கள், கிளை மேலாளா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

