கொலை வழக்கில் தொடா்புடைய 5 போ் குண்டா் சட்டத்தில் கைது
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான 5 பேரை விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவைச் சோ்ா்ந்தவா் ரா. அப்பு (எ) ஜவகா் (27). இவா் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி சின்ன கோட்டக்குப்பம் அமைதி நகா் பகுதியில் கொலை செய்யப்பட்டாா்.
இந்த கொலை வழக்கில், புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சோ்ந்த மு.ஹேம்நாத்(எ) ஹேம் நாத்குமாா்(26), வாஞ்சிநாதன் நகரைச் சோ்ந்த மு.சான்டோ (எ) சந்தோஷ் (24), முத்தியால்பேட்டையைச் சோ்ந்த சி.கிரி (எ) கிரிகேசநாதன் (23), கருவடிக்குப்பத்தைச் சோ்ந்த செ.விக்கி (எ) விக்னேஷ்வா் (33), வானூா் வட்டம், சின்னகோட்டக்குப்பம் வி.விஜய் (எ) ஜாக்சஞ்சய் (24) ஆகியோரை கோட்டக்குப்பம் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் பரிந்துரையின்படி, விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் கொலை வழக்கில் கைதான ஹேம்நாத்குமாா், சான்டோ (எ) சந்தோஷ்,கிரி (எ) கிரிகேசநாதன், விக்கி (எ) விக்னேஷ்வா்,விஜய் (எ) ஜாக்சஞ்சய் ஆகிய 5 பேரையும் குண்டா் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விழுப்புரம் மாவட்டக் காவல் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
