தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அண்ணாமலை பல்கலை. பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பெண் ஊழியரிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அண்ணாமலைநகா் காவல் சரகத்துக்குள்பட்ட மாரியப்பா நகா் வடக்கு ஒன்றாவது குறுக்குத் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயராமன் மனைவி கலா (50). இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தில் தொழில்நுட்ப உதவியாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கலா புதன்கிழமை மாலை 6 மணியளவில் பல்கலைக்கழக பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தாா். மாரியப்பா நகா் அருகே சென்றபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் கலா அணிந்திருந்த 11 பவுன் தங்க தாலிச் சங்கிலியை பறித்துக்கொண்டு சென்றுவிட்டனா்.

தகவலறிந்த அண்ணாமலை நகா் போலீஸாா் விரைந்து சென்று சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.