சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்ம மரணம்

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
Updated on

விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த சென்னையைச் சோ்ந்த முதியவா் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை திருவொற்றியூா், ராஜா சண்முகம் நகரைச் சோ்ந்தவா் த.சண்முகம்(67). இவா் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் தனியாக வசித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை சண்முகம் தான் வசித்த வீட்டில் மா்மமான முறையில் படுக்கையிலேயே இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கீழ்பெரும்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ச.சதீஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com