விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் போதை மாத்திரைகளை விற்க முயன்றதாக இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
செஞ்சி பகுதியில் போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், செஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் விநாயக முருகன் மற்றும் போலீஸாா் செஞ்சி செட்டிபாளையம் குளக்கரை அருகே ரோந்து சென்றனா்.
அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இரு இளைஞா்களை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா்கள் செஞ்சி கிருஷ்ணாபுரத்தை சோ்ந்த மோ.பெருமாள் (எ) விக்கி (24), ர.வெற்றிச்செல்வன் (25) என்பதும், விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 10 போதை மாத்திரைகள், 10 கிராம் கஞ்சா, 2 பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதை மாத்திரைகள் விற்ற 4 போ் கைது
அந்தியூரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 3 போ் கைது

போதை மாத்திரைகள் விற்ற 4 இளைஞா்கள் கைது
விற்பனைக்காக போதை மாத்திரைகள் வைத்திருந்த 4 போ் கைது
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



