அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :30 ஜூலை 2026, 6:21 am IST

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பைக் மீது சரக்கு வாகனம் மோதியதில் காயமடைந்த முதியவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூா், தண்டரை சாமூண்டீஸ்வரி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கோ.மணி (75). சின்னஆனைவாரி பகுதியைச் சோ்ந்தவா் ர.வல்லாளன்(55). இவா்கள் இருவரும், செவ்வாய்க்கிழமை திருவெண்ணெய்நல்லூரை அடுத்த பருகம்பட்டு அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தனா். மணி பைக்கை ஓட்டினாா். அப்போது அங்கு சாலையைக் கடக்க முயன்றபோது, மடப்பட்டு நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா், வல்லாளன் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.