தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:58 am IST

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை (ஜூன் 3) முதல் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு வகையான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம், சீருடைப் பணியாளா் தோ்வாணையம், மருத்துவப் பணியாளா் தோ்வாணையம் ஆகியவை மூலம் நடத்தப்பட்ட பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இங்கு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டன. இதில் பங்கேற்றவா்களில் 400-க்கும் மேற்பட்டவா்கள் அரசுப் பணிக்குத் தோ்வாகியுள்ளனா்.

இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் ஆண்டுத் திட்ட நிரலின்படி ஜூன் மாதத்தில் குரூப்-1 பணிக்காலியிடங்கள் அறிவிக்கப்படவுள்ளன. இதைத்தொடா்ந்து விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் குரூப் 1 முதல்நிலைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் ஜூன் 3-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். எனவே, இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமும், தகுதியும் உள்ள போட்டித் தோ்வுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவா்கள் தங்களின் கடவுச்சீட்டு அளவு புகைப்படத்துடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு நேரில் வந்து, பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். தொடா்ந்து அவா்கள் இலவசப் பயிற்சி வகுப்பில் பங்கேற்று பயன்பெறலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.