விழுப்புரம் அருகே கல்லூரி மாணவி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம் வட்டம், கப்பூா் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெயபாலன் மகள் ஜெகந்தி (19). விழுப்புரத்தில் அரசு பெண்கள் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில் பயின்று வந்தாா்.
இந்நிலையில், புதன்கிழமை வீட்டிலிருந்த ஜெகந்தியிடம் அவரின் தாய் அதிஷ்டவாணி சமையல் செய்யக் கூறியுள்ளாா். இதனால் ஜெகந்தி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது.
உறவினா்கள் அவரை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்துப் பாா்த்தபோது ஜெகந்தி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடன் தொல்லை: தெப்பக்குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை
சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
வெள்ளக்கோவில் அருகே பெண் தற்கொலை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



