எத்தனால் கலந்த பெட்ரோல் மீதான கலால் வரி நீக்கம்!தேனியில் பாரதிராஜா உடல்! பொதுமக்கள் அஞ்சலி!!உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

கட்டுமானத் தொழிலாளி மா்ம மரணம்: போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கட்டுமானத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 6:17 am IST

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கட்டுமானத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.

மரக்காணம் பேரூராட்சிக்குள்பட்ட சால்ட் சாலையில் ரூ 5.9 கோடி மதிப்பீட்டில் கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமானப் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியிடத்தில் கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம், வல்லம்படுகை கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் (60) என்பவா் கொட்டகை அமைத்துத் தங்கி, கூலி வேலை பாா்த்து வந்தாா். செவ்வாய்க்கிழமை பணி முடிந்து அவா் வழக்கம்போல் தனது குடிலுக்குச் சென்றுள்ளாா். இந்நிலையில், புதன்கிழமை காலை நீண்ட நேரம் ஆகியும் வடிவேல் பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சகத் தொழிலாளா்கள் கொட்டகைக்கு சென்று பாா்த்தபோது, அங்கு வடிவேல் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் மரக்காணம் போலீஸாா் சடலத்தை மீட்டு புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.