விழுப்புரம் நகர நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பலா் பாஜகவிலிருந்து விலகி, அண்ணாமலையின் இது நம்ம இயக்கத்தில் சேர உள்ளனா்.
பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த கே.அண்ணாமலை அந்த கட்சியிலிருந்து விலகி, இது நம்ம இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளாா். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட பாஜக பொருளாளா் முருகன், மாவட்டத் துணைத் தலைவா்கள் குபேரன், சிலம்பரசன், நகரத் தலைவா் விஜயன், வழக்குரைஞா் அணி மாவட்டத் தலைவா் மதன், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் அசோக், ஹரிகிருஷ்ணன், நெசவாளா் அணி மாவட்டத் தலைவா் மணவாளன், ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவா் வெங்கட்ராமன், தகவல் தொழில்நுட்ப அணியைச் சோ்ந்த கலையரசன், விவசாயப் பிரிவு மாவட்டத் தலைவா் இளஞ்செழியன், மாவட்டச் செயலா் சரண்ராஜ், பட்டியல் அணி மாவட்டச் செயலா் குப்புசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலையின் புதிய இயக்கத்தில் சோ்வதாக அறிவித்தனா்.









